செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த புதிய ‘ரோபோ’ ‘நாசா’ அனுப்பியது

223 0

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக 2 செயற்கை கோள்களுடன் ‘இன்சைட்’ என்ற புதிய ரோபோவை நாசா மையம் அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘நாசா’ மையம் ஏற்கனவே ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும்.

இது அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அதன் வேகம் போதவில்லை. எனவே தற்போது ‘இன்சைட்’ என்ற புதிய ரோபோவை செவ்வாய் கிரகத்துக்கு ‘நாசா’ அனுப்பியுள்ளது.

இது கடந்த 5-ந்தேதி (சனிக்கிழமை) வெற்றிகரமாக ஏவப்பட்டது. அது இன்னும் செவ்வாய் கிரகத்தை சென்றடையவில்லை. இந்த ‘இன்சைட்’ ரோபோவுடன் 2 செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் இறங்கியவுடன் அங்கு குழி தோண்டி ஆய்வை தொடங்கும். அதே நேரத்தில் செயற்கைகோள்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும். இதன்மூலம் ஆராய்ச்சி தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்ப முடியும்.

‘ரோபோ’வுக்குள் சிறிய நிலநடுக்க கருவி உள்ளது. அது செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தை ஆய்வு செய்து அனுப்பும்

Leave a comment