மேதினக் கூட்டத்தில் பங்கேற்க தயாரான கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று நோர்வுட் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

