வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் இளைஞர் கைது

311 0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்ட ஹில்பட் சில்வா மாவத்தையில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இச்சுற்றிவளைப்பின் போது 19 வயதுடைய மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்யும் வேளையில் அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் ஐந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்றுபாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன்  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment