வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் பொலிஸாரால் அதிரடிக் கைது!! சுன்னாகம் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!!

866 27

சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் வாள்வெட்டு குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்றையதினம்(04-05-2018) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனா்.அத்துடன், நான்கு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுன்னாகம் பொலிஸார் அதிரடியாக இறங்கி குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Leave a comment