பல்­க­லை மாண­வர்கள் 10 பேருக்கும் பிணை!

198 0

பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழு­வுக்குள் அத்­து­மீறி உள்­நு­ழைய முற்­பட்ட குற்­றச்­சாட்டில் பொலி­ஸாரால் கடந்த 26ஆம் திகதி கைது­செய்­யப்­பட்ட அனைத்து பல்­க­லைக்­க­ழக பிக்­குகள் ஒன்­றி­யத்தின் பிக்கு மாணவர் உட்­பட 10 மாண­வர்­களை நேற்று பிணையில் செல்ல கோட்டை பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க அனு­ம­தித்­துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி கைது­செய்­யப்­பட்ட இவர்கள் நேற்றுவரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட அளுத்­கடை நீதிவான் நீதி­மன்­றத்­தினால் உத்­த­ர­விடப்பட்டிருந்தது. இந்­நி­லையில் விளக்­க­ம­றியல் காலம் நிறை­வ­டைந்து நேற்று இவ்­வ­ழக்­கா­னது கோட்டை பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே மேற்­கண்ட உத்­த­ரவு நீத­வானால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­குழு முன்­பாக கடந்த மாதம் 26ஆம் திகதி பல்­க­லைக்­க­ழ­கங்­களில் 2016 மற்றும் 2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­காக பெளத்த சமய மற்றும் ஆய்­வுத்­து­றைக்கு மாண­வர்கள் உள்­வாங்­கப்­ப­டு­வதை இடை­நி­றுத்­தி­யுள்­ள­மையை கண்­டித்து அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவ பிக்­குகள் சம்­மே­ள­னத்­தினால் ஆர்ப்­பாட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது, குறித்த மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழு­வுக்குள் அத்­து­மீறி உள்­நு­ழைய முற்­பட்ட குற்­றச்­சாட்டின்பேரில் கறு­வாத்­தோட்ட பொலி­ஸாரால் கைது­ செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு கைது ­செய்­யப்­பட்­ட­வர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் அவர்கள் நேற்றுவரையில் விளக்­க­ம­றியலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வி­ளக்­க­ம­றியல் காலம் நிறை­வ­டைந்து நேற்று இவ்வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே இவ்வாறு 10 மாண வர்களையும் 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும்  செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

Leave a comment