அரசாங்கத்தின் தீர்மானத்தை நீக்கக் கோரி வழக்கு தாக்கல்

571 0

282855-640x360நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வரிவிலக்கு செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டதரணி நாகானந்த கொடிதுவக்கு இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட அரச அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வரிவிலக்கு தீர்மானத்தின் மூலம் திரைசேரிக்கு சுமார் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்துவதை அனுமதிக்க முடியாதென்றும் மனுதார் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment