உயிருக்கு போராடும் 5 வயது சிறுமியை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்- விளம்பர செய்தி

361 0

சென்னையைச் சேர்ந்த மதுசூதனன் மற்றும் நித்யா தம்பதியினருக்கு நிவேதா என்ற 5 வயது மகள் உள்ளார். நிவேதாவின் ரத்தத்தில் பிறக்கும் போதே வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலும் அவளால் தாங்க முடியாது. நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், நிவேதா நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. திடீரென ஒருநாள் இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, நிவேதா காஞ்சி காமாட்சி குழந்தைகள் டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் வாழ்ந்து வருகிறார். சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது அவர்கள் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை மதுசூதனன் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பதால் அவரால் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தன் மகளின் உயிரை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. தன் கண்முன்னே உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் தன் மகளை காப்பாற்ற முடியாமல் பெற்றொர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் எதுதர்மா என்ற பெயரில் இயங்கும் வலைத்தளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. சிறுமியின் உயிரை காப்பாற்ற விரும்புவர்கள் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிறுமியின் தாய் நித்யா இதுகுறித்து கூறுகையில், ‘என் மகள் அவதிப்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மற்ற குழந்தைகளை போல அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. சரியாக சாப்பிட முடிவதில்லை. சக குழந்தைகளுடன் விளையாட முடியாத ஏக்கமும் அவளிடம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னால் மூச்சு விட முடியவில்லை அம்மா என அவள் என்னிடம் கதறுவதை கேட்டு செத்து செத்து பிழைக்கிறேன். அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவிக்கரம் நீட்டும் படி கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்த விரும்புவர்கள் இந்த லிங்கை https://www.edudharma.com/campaigns/Maalaimalarcampaign பயன்படுத்தி செலுத்தலாம் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தொடர்புக்கு:-

ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி, கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639 +919087766633

Leave a comment