மாங்குளத்தில் சூறாவளி

284 0

வவுனியா மாங்குளத்தில் நேற்று மாலை வீசிய திடீர் சூறாவளி காரணமாக புதிய கொலனிப் பகுதியில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த 12 வீடுகளும் கல் வீடுகள் என்றும் அத்துடன், பல பயன்தரு மரங்களும் முறிவடைந்துள்ளன.

சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் சூறாவளி வீசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் வரட்சியான காலநிலை நிலவிவந்த நிலையில், தற்பொழுது நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment