யாழ் நகருக்கு சென்ற இளம் யுவதி திடீர் மாயம்!! பொலிஸார் தீவிர தேடுதல்!!

246 0

தொழில் நிமிர்த்தம் யாழ். நகருக்கு சென்ற யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 18ம் திகதி காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற குறித்த யுவதி இதுவரையிலும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த யுவதி யாழ். நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment