வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத வியாபார நிலையங்களை அற்றும் நடவடிக்கை (காணொளி)

330 0

வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத வியாபார நிலையங்களை அற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, வர்த்தகர்களுக்கும் நகர சபையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

நகர சபைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட, வவுனியா நகர சபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள், வருமான வரி பரிசோதகர்கள், நகர சபை ஊழியர்களுடன், வர்த்தகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக, வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை, வவுனியா நகர சபையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், இன்று வவுனியா குருமண்காட்டு பகுதியில் அமைந்துள்ள, சட்டவிரோத வியாபார நிலையம் ஒன்றினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட, நகர சபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள், வரி பரிசோதகர்கள், நகர சபை ஊழியர்களின் செயற்பாட்டினை தடுக்கும் முகமாகவும், அநாகரிகமாகவும் வர்த்தகர்கள் நடந்துகொண்டனர்.

அதன் பின்னர், மக்கள் வர்த்தகர்களுடன் முரண்பட்டதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment