ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டம் இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 03.00 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டமத் இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாக யோசனைகளை முன்வைப்பதற்கு அந்தக் கட்சியின் 14 அமைச்சர்கள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் இடம்பெற்றிருந்தமை கூறத்தக்கது.

