வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்டியில் இருந்து சில மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
28 ஆண்டு காலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13ஆம் திகதி இராணுவத்தினரால் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
அவ்வாறு விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்றடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. அவை தொடர்பில் அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் அவற்றை பார்வையிட்டனர். கண்ணிவெடி அகற்றும் குழுவினர் நேற்று மாலை வந்து பார்வையிட்ட நிலையில் அங்கிருந்து குண்டுகள் மீட்டுச் செல்லப்படவுள்ளன

