வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்(காணொளி)

387 0

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி 2ஆவது முறையாக வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே, இன்றைய தினம் விமானம் மூலம் யாழ்ப்பாணம் வருகைதந்து யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண ஆளுநரை செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றதை தொடர்ந்து தனது கடமைகளை ஆளுநர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது அலுவலகத்தில் கடமைகளைப்பெறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,

வடக்கு மக்களுக்கு நிறைவேற்றாத பணியை நிறைவேற்றுவதற்கு, மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற வடக்கு ஆளுநர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நாகவிகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டைகையை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்று, கலந்துரையாடியுள்ளார்.

Leave a comment