ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

395 0

வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது.  1ஆம் திக­தியே  மே தினத்தை நடத்­துவோம்  எனவும் யாழ்ப்­பா­ணத்தில்  மே முதலாம் திக­தியும் கொழும்பில் 7 ஆம் திக­தியும் மே தினத்தை கொண்­டா­டுவோம் என்று    ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர்  அங்கு மேலும் கூறு­கையில்,

மே தினத்தை 7 ஆம் திகதி கொண்­டா­டு­மாறு அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்­மதி வார­மாக உள்­ள­மை­யினால் இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­த­தாக கார­ணமும் கூறி­யுள்­ளனர். எவ்­வாறிருப்­பினும் வெசாக் வாரம் என்ற கார­ணத்­தினால் மே தினத்தை தடுக்க எவ­ருக்கும் உரிமை இல்லை. கொழும்பில் வெசாக் வாரத்தை  மக்கள் கொண்­டாடும் கார­ணத்­தினால் எம்மால் மக்­க­ளுக்கு இடைஞ்­ச­லாக செயற்­பட முடி­யாது.

இம்­முறை ஜே.வி.பி. யின் மே தினக் கூட்­டத்தில் வழ­மையை விடவும் மக்கள் அதி­க­மாக கலந்­து­கொள்­வார்கள். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்து  வரு­கின்றோம். எனினும் கொழும்பில் பாரிய மே தினக் கூட்­டத்தை நடத்­து­வ­தனால் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­படும். மாநா­யக்க தேரர்­களும் எமக்கு இந்த கார­ணங்­களை தெளிவுபடுத்­தினர். ஆகவே மாநா­யக்க தேரர்­களின் கோரிக்­கையை நாம் மீற­வில்லை. மே தினத்­தன்று ஜே.வி.பி. யின் தொழி­லாளர் உரி­மைக்­கான மே தினக் கூட்டம் கட்­டாயம் இடம்­பெறும்.

மே மாதம் முதலாம் திகதி எமது மே தினக் கூட்­டத்தை யாழ்ப்­ப­ாணத்தில்  நடத்­து­கின்றோம். எமது தொழிற்­சங்­கங்கள், சிவில் அமைப்­புகள் மற்றும் பிர­தி­நி­திகள் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு யாழ்ப்­ப­ாணத்தில் எமது மே தினத்தை நடத்­துவோம். 7 ஆம் திகதி கொழும்பில் எமது மே தினக்­கூட்டம் வழ­மை­போ­லவே இடம்­பெறும். இம்­முறை   பொரளை  சந்­தியில் ஆரம்­ப­மாகும் எமது பேரணி கிரு­லப்­பனை பி.ஆர்.சி. மைதா­னத்தில் மே தினக்கூட்­டத்­துடன் நிறை­வ­டையும்.

தற்­போது நாட்டில் தொழில் வர்க்­கத்­தினர் பாரிய நெருக்­க­டி­யினை சந்­தித்­துள்ள நிலையில் எமது சாதா­ரண வர்க்க மக்­க­ளுக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. வரி சுமையில் மக்கள் நெருக்­கப்­பட்­டுள்­ளனர். பொரு­ளா­தார ரீதியில் ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டுகள் எவையும் இல்­லாது போயுள்­ளன. வேலை­வாய்ப்­புகள் இல்­லாது எமது இளை­ஞர்கள் தவிக்­கின்­றனர். மனித உரிமை மிகப்­பெ­ரிய கேள்­வி­யாக மாறியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டே நாம் எமது மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

Leave a comment