பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு

16903 0

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018.

08.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியான கார்லே கோணேஸ் என்னும் இடத்தில் உள்ள ESPACE ASSOCIATIF DES DOUCETTES ந மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு அகவணக்கத்துடன் தேர்வு நிகழ்வு ஆரம்பமாகியது. கலைக்கும் வணக்கம் செய்யும் வகையில் நடராசர் சிலைக்கும், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் திருவுருவப்படத்திற்கும் ஒளியேற்றி வைக்கப்பட்டது. ஒளியினை பிரான்சின் மூத்த கலைஞர்களில் ஒருவரும், சோதியா கலைக்கல்லூரி வயலின் ஆசிரியை சங்கீத பூசணம், திருவாட்டி. கோமளா கந்தையா அவர்களும், சோதியா கலைக்கல்லூரி இசைஆசிரியை,சங்கீத கலா வித்தகர் திருமதி. அம்பிகை பாலகுமார் அவர்களும், பரத ஆசிரியர்கள் ஆடற்கலையரசி திருவாட்டி. தனுசா மகேந்திரராசா, பரதகலாவித்தகர் திருவாட்டி. தாரணி சிறிதரன், பரதசூடாமணி திருவாட்டி. அனுசா மணிவண்ணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இவர்களின் மாணவர்கள் இந்த ஆற்றுகைத்திறன் வெளிப்பாட்டுத் தேர்வில் பங்கு பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வை மங்களகரமாக தொடக்கிய வைக்க மங்கள விளக்;கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றினை மாநகரபிதா Mr.Maurice Lefevre அவருடன் உதவி முதல்வர் Mr. Benoit Jimenez அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களும், தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் பொறுப்பாளர் திரு.nஐயக்குமாரன். மற்றும் தேர்வுக்கு வந்திருந்த நடுவர்களான சங்கீத வித்துவான்களும், சங்கீத பூசணங்களான சுவிசு நாட்டிலிலுந்து திரு. செகசோதி ஆறுமுகம் அவர்கள், டென்மார்க்கில் இருந்து திருமதி. குமுதினி பிரதிவிராஐ; அவர்களும், சுவிசு நாட்டிலிருந்து அனைத்துலகத் தமிழ் கலை நிறுவனத்தாலும் வந்தருந்த நடன ஆசிரியர்கள் திருமதி. பவானி சிறீதரன் அவர்களும், திருமதி. ஞானசுந்தரி வாசன் அவர்களும், திருமதி. நிமலினி nஐயக்குமார் அவர்களும்,வயலின் ஆசிரியர் நுண்கலை மாணி திருமதி. தர்மிகா முரளிதரன் அவர்கள் பிரான்சு ஆகியோர் ஏற்றிவைத்திருந்தனர்.

வரவேற்புரையை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள் உரையாற்றியிருந்தார். தேர்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாநகர முதல்வரும், உதவி முதல்வரும் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தினரால் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர். மாநகர முதல்வர் உரையையும் ஆற்றியிருந்தார். தனது உரையில் தமிழ் மக்களின் இந்த செயற்பாட்டை மிகவும் பாராட்டுவதாகவும் தமது பாரம்பரியங்கள் அழியவிடாது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதையும் பாராட்டுவதாகவும், அதுவும் தனது பிரதேசத்தில் நடைபெறுவதையிட்டு பெருமையும்,மகிழ்வடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு ஆரம்பமாகியது.

• வயலினில் தனது ஆற்றுகையின் வெளிபாட்டை லாககூர்னோவ் தமிழ்ச்சோலை மாணவியும், திருவாட்டி கோமளா கந்தையா அவர்களின் மாணவி செல்வி. லக்சியா அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார்.

இவர்களுக்கான அணிசேர் கலையை மிருதங்கத்தினை Nஐர்மனியில் இருந்து சங்கீதரத்தினம் திரு. சண்முகரட்ணம் பிரணவநாதன் அவர்களும், பிரான்சில் இருந்து கடம்வாத்தியத்தை செல்வன். கருணாகரன் சாரங்கன் அவர்களும் வழங்கியிருந்தனர்.

உருப்படிகளாக வர்ணம் , வாதாபி, இராகம் தானம் பல்லவி, காபி ராகத்தில் அமைந்த என்ன தவம் செய்தேன், கானடா ராகத்தில் அமைந்த அலைபாயுதே, சிவரஞ்சனி ராகத்தில் திலானா, சண்முகப்பிரியா ராகத்தில் முத்தைத் தரு திருபுகழ் வாசித்து பலத்த கரகோசங்களைப் பெற்றுக் கொண்டார்.

• அடுத்து ஆற்றுகை வெளிபாட்டுத் தேர்வில் வாய்பாட்டு இடம்பெற்றது. தனது குரலிசையினால் ஆற்றுகை வெளிபாட்டினை சோதியா கலைக்கல்லூரி மாணவியும், சங்கீத ஆசிரியை திருவாட்டி அம்பிகை பாலகுமார் அவர்களின் மாணவி செல்வி. அனோஐpனி எட்வேட் லூயிஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.

கம்சத்பனி வர்ணம், விசாரத கீர்த்தனம், கல்யாணி ராகத்தில் இராகம், தாளம், பல்லவி, தில்லானா, திருப்புகழுடன் மிஸ்ரரஞ்சனி ராகத்தில் அமைந்த மறந்து போகுமோ உணர்வுப் பாடலினையும் பாடி பலத்த பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

இவருக்கான அணிசேர் கலையை மிருதங்கத்தினை செல்வன். விநோசாந் செல்வக்குமார் அவர்களும், வயலினை செல்வன். பிரசாந்த் செல்வக்குமார் அவர்களும், கடத்தினை செல்வன். கருணாகரன் சாரங்கன் அவர்களும் வழங்கியிருந்தனர். ( இவர்களும் சோதியா கலைக்கல்லூரி மாணவர், ஆசிரியர்கள் ) என்பதும் குறிப்பிடத்தக்கது.

• அதனைத் தொடர்ந்து ஆற்றுகைத்தேர்வு நடனத்தை நர்த்தனதிரா நடனாலயம் நடன ஆசிரியர் திருவாட்டி. தாரணி சிறிதரன் அவர்களின் மாணவி செல்வி. சிந்துசா குணரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார்.

தனது தேர்வு உருப்படிகளாக புஸ்பாஞ்சலி> கணேச ஸ்துதி, அலாரிப்பு, பதவர்ணம், பதம், தில்லானா போன்றவற்றை வழங்கியிருந்தார்.

இவருக்கான அணிசேர் இசையை நட்டுவாங்கத்தை பரதகலா வித்தகர் திருமதி. தாரணி சிறிதரன் அவர்களும், மிருதங்கத்தினை, திரு. பிரதாப் ராகவேந்திரா அவர்களும், குரலிசையினை திருமதி. பிரதிவிராஐ; அவர்களும், வயிலினை செல்வன். பிரகாசு பரமேசுவரலிங்கம் அவர்களும் வழங்கியிருந்தனர்.

• அதனைத் தொடர்ந்து நடனத்தின் மூலம் தனது ஆற்றுகை திறன் மூலம் செவரோன் தமிழ்ச்சோலை மாணவியும், நடன ஆசிரியர் திருவாட்டி தனுசா மகேந்திரராஐh அவர்களின் மாணவி செல்வி. கஐhனி கணேசலிங்கம் அவர்கள் வழங்கியிருந்தார்.

இவர் தனது ஆற்றுகைத் திறன் நடனத்தில் தோடயமங்களம், வர்ணம், பதம், கீர்த்தனம், தில்லானா போன்றவற்றை வழங்கியிருந்தார்.

இவரின் ஆற்றுகைத் திறனுக்கு அணிசேர்க்கும் இசையை நட்டுவாங்கம் திருமதி. தனுசா மகேந்திராசா அவர்களும், குரலிசையை முனைவர் சுயம்பு கரிகரன் அவர்களும், மிருதங்கத்தினை திரு. பிரதாப் ராகவேந்திரா அவர்களும், வயலினை திருமதி. தர்மிகா முரளிதரன் அவர்களும் வழங்கியிருந்தனர்.

• தொடர்ந்து ஆற்றுகை வெளிபாட்டுத்தேர்வு வயலின் நடைபெற்றது. ஆசிரியை திருவாட்டி. கோமளா கந்தையா அவர்களின் மாணவன் செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாந் அவர்களின் ஆற்றுகைத் திறன் நடைபெற்றது.

இவர் தனது வயலின் மூலம் வர்ணம், பஞ்சமாதங்கமுக, குருலேக, இராகம் தாளம் பல்லவி, மதுவந்தி இராகத்தில் அமைந்த கண்டநாள் முதல், ஆபேரி ராகத்தில் தில்லானா வை வாசித்து பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார்.

இவருக்கான அணிசேர்கலைஞராக மிருதங்கத்தினை செல்வன். ருக்சன் சிறீரங்கராஐh அவர்களும், கடத்தினை செல்வன். கருணாகரன் சாரங்கன் அவர்களும் வழங்கியிருந்தனர்.

சிறப்புரையை அனைத்துலத் தமிழ்க்கலை நிறுவகம் சார்பாக சுவிசு நாட்டிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியை திருமதி. ஞானசுந்தரி வாசன் அவர்கள் உரையாற்றியிருந்தார். எமது அடுத்த சந்ததியினரை கலையின் ஊடாக வளர்தெடுப்பதோடு நின்று விடாது அவர்களை அடுத்த மிகத் தரம் வாய்ந்ததொரு ஆசியர்களாக ஆக்கும் இப்பெரும் அனைத்தலகத் தேர்வில் தமது மாணவர்களை தந்திருக்கும் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்ச்சோலைகளுக்கும்> தமிழர் நலன்சார்புகட்டமைப்புகளுக்கும் தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார். வளர்ந்து வரும் எமது கலைக்குழந்தைகளின் வளர்ச்சியில் இத்தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதையும், இதில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களாக தெரிவு செய்யப்படுவோர் தரம்வாய்ந்தவர்களாக இருக்கப்போவதால் அவர்களும் தங்களுக்கென கலைக்குழந்தைகளை பொறுப்புடன் உருவாக்க வேண்டும் என்றும் கலந்து கொண்டு கலைக்குழந்தைகளை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

• அதனைத்தொடர்ந்து ஆற்றுகை வெளிப்பாடு நடனம் இடம்பெற்றது. தமிழ்க்கலை மன்றம் ஆசிரியை திருவாட்டி. அனுசா மணிவண்ணன் அவர்களின் மாணவி. செல்வி. நிதிலா அரியபுத்திரர் அவர்கள் தனது வெளிபாடுகளை புஸ்பாஞ்சலி பிள்ளையார்துதி, ஐதீஸ்வரம், வர்ணம், பதம், தில்லானா போன்றவற்றால் வெளிப்புடுத்தியிருந்தார்.

இவருக்கான நட்டுவாங்கத்தினை திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களும், குரலிசையை திருமதி. குமுதினி பிருத்விராஐ; அவர்களும், மிருதங்கத்தை திரு. பிரதாப் ராமச்சந்திரராவ், வயலின் திருமதி. கோமளா கந்தையா அவர்களும் வழங்கியிருந்தனர்.

• தொடர்ந்து வயலின் மூலம் தனது ஆற்றுகைத்திறனை வெளிக்காட்டியிருந்தார் சோதியா கலைக்கல்லூரி மாணவனும், வயலின் ஆசிரியை திருவாட்டி. கோமளா கந்தையா அவர்களின் மாணவனுமாகிய செல்வன். செல்வக்குமாரன் பிரசாத் அவர்கள்.

தனது வயலின் இசைமூலம் வர்ணம்- வனஐhக்சஐp கஐனனயுதம், இராகம் தாளம் பல்லவி, திராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல், தில்லானா, திருப்புகழ் வாசித்திருந்தார். இவருக்க அணிசேர் இசையை செல்வன். வினோசாந்த் செல்வக்குமரன் அவர்களும், கடத்தினை திரு. நிதர்சன் சிறிராஐசேகரம் அவர்களும் வழங்கியிருந்தனர்.

நடைபெற்ற ஆசிரியர் தரத்திற்கான இந்த தேர்வில் பங்கு கொள்ளும் இவ்மாணவர்கள் தமது கலை ஆசிரியர்களிடம் பத்து முதல் பதின்ஐந்து வருடங்களுக்கு மேலாக இக்கலைகளை பயின்று வருகின்றவர்கள். இவர்களில் பலர் பல மேடைகளையும், விருதுகளையும் பெற்றிருக்கின்றார்கள். எப்படிப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் இந்த பரீட்சைமூலம் அவர்களின் திறனை இன்னும் வெளிகொணர்வதோடு, அதனை மற்றவர்களுக்கும் வெளிகாட்டி எல்லோரையும் ஊக்கப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இது அமைந்திருக்கின்றது. இன்றைய இத்தேர்வு நிகழ்வில் பல கலை முதன்மை ஆசிரியர்களும், மூத்த கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புச்செய்திருந்தனர். கலையில் ஈடுபாடு கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

நன்றியுரையை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளர் திரு. அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார். மாலை 20.30 மணிக்கு இனிதே நிகழ்வு நிறைவு பெற்றது.

Leave a comment