சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கே.நளின் ருவன்ஜீவ கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஏப்ரல் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பி கே.நலின் ருவன்ஜீவ பர்னாந்து மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் இணைந்து கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

