தரைத்தோற்ற மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடம் மே மாதத்தில்

585 0

இலங்கையின் புதிய வரைபடத்தை எதிர்வரும் மே மாதம் வெளியிடுவதற்கு நில அளவைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

குறித்த வரைபடத்தைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் பீ.என்.பீ. உதயகந்த தெரிவித்துள்ளார்.

இறுதியாக வெளிவந்த படத்தின் பின்னர் தரைத் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் புதிய வரைபடத்தில் வெளிவரவுள்ளதாகவும் திணைக்களத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment