மாங்குளம் பகுதியில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபரீதம்; 30 பேர் காயம்

216 0

வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் பற்றி தெரிவருவதாவது, வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று  வவுனியா மாங்குளம் பகுதியில் பயணித்த போது வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததையடுத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி குடைசாந்ததில் பேருந்தில் பயணித்த 30 பேர்வரையில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment