அடுத்தடுத்த தீ விபத்துக்களினால் கலங்கிப் போன கிளிநொச்சி! ! புதிய தீயணைப்பு படையை உருவாக்கும் பணிகள் மும்முரம்!!

230 0

கிளி­நொச்­சிக்கு என நிரந்­த­ர­மான தீய­ணைப்­புப் படை விரை­வில் நிறு­வப்­ப­ட­வுள்­ளது என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளில் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கம் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றது.

கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு என நிரந்­த­ர­மான தீய­ணைப்­புப் படையோ, அதற்­கான வாகன வச­தி­களோ இல்­லாது அங்­குள்ள மக்­கள்இ அதி­கா­ரி­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.இடர்­கள் இடம்­பெ­றும்­போது அவற்­றின் முக்­கி­யத்­து­வம் உண­ரப்­ப­டும். பின்­னர் அது­பற்­றிய பேச்­சு­கள் நிறுத்­தப்­ப­டும்.

எனி­னும் கடந்த 2016ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 16ஆம் திகதி இரவு கிளி­நொச்­சி­யையே சோகத்­தில் ஆழ்த்­திய சம்­ப­வம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டது.கிளி­நொச்சி பொதுச்­சந்­தை­யில் பெரும் தீ விபத்து ஏற்­பட்­டது. இந்­தத் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தேவை­யான வச­தி­கள் இல்­லா­த­தன் கார­ண­மாக 2 மணித்­தி­யா­லங்­க­ளில் வேக­மாக பர­விய தீ பொதுச்­சந்­தை­யில் உள்ள சுமார் 125 கடை­களை எரித்து நாச­மாக்­கி­யது.

கடை­கள் பற்றி எரிந்து கொண்­டி­ருக்­கும்­போது சம்­பவ இடத்­துக்கு வந்த வர்த்­த­கர்­கள் தங்­க­ளு­டைய பொருள்­களை மீட்­ப­தற்­கா­க­வும் தீயை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­கா­க­வும் போரா­டி­னர்.தனியே மனி­தர்­க­ளு­டைய சக்­தி­யால் இயற்­கையை கட்­டுப்­படுத்த முடியாது என்­பது போல, அவர்­கள் எவ்­வ­ளவு முயற்­சித்­தும் எந்­தப் பய­னும் அற்று அனைத்­துப் பொருள்­க­ளும் தீயில் கரு­கின.

கண்­ணெ­திரே தங்­க­ளு­டைய சொத்­துக்­கள், அழி­வ­தைத் தாங்­கிக் கொள்ள முடி­யாத வர்த்த­கர்­கள் கண்­ணீர் விட்­டுக் கதறி அழு­த­னர்.இந்­தச் சோகச் சம்­ப­வம் அங்­கி­ருந்த அனை­வ­ரது உள்­ளத்­தி­லும் பேரி­டி­யாக விழுந்­தது.அதி­கா­ரி­க­ளின் கண்­க­ளும் கசிந்­தன. இந்­தச் சம்­ப­வத்­தின் பின்­னர் கிளி­நொச்­சிக்­கென ஒரு தீய­ணைப்­புப் படை வேண்­டும் என்­பது அழுத்­திக் கூறப்­பட்­டது.

மக்­கள், மக்­கள் பிர­தி­நி­தி­கள், அதி­கா­ரி­கள் பல­ரும் அதில் அக்­கறை கொண்­ட­னர்.அடுத்ததொரு இடர் இடம்­பெ­ற­முன்னர் கிளி­நொச்­சி­யில் தீய­ணைப்­புப் படை தயார் நிலை­யில் இருக்­கும் என நம்­பி­னர்.தற்­போது அதற்­கான வேலைத்­திட்­டங்­கள் இடம்­பெ­று­கின்­றன.தீய­ணைப்­புப் படைக்­கான கட்­ட­டம் கிளி­நொச்சி கர­டிப்­போக்­குச் சந்­தி­யில் அமைக்­கப்­ப­டு­கி­றது. அது முடி­வு­றும் தறு­வா­யில் உள்­ளது.

அதே போல் தீய­ணைப்புப் படைக்­குத் தேவை­யான பவு­சர்­கள், தீய­ணைப்பு இயந்­தி­ரங்­கள் என்­ப­வற்றை வெளி­நாட்­டில் இருந்து பெற்­றுக் கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன.எனவே, அனைத்­தும் நிறை­வுற்று விரை­வில் கிளி­நொச்சி தீய­ணைப்­புப் படை­யும் தனது சேவை­க­ளை மேற்கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ன்றது.

Leave a comment