பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்ட போதிலும், அரசாங்கம் மேலதிகமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே எஞ்சியுள்ள அரசாங்க காலம் பிரதமருக்கு தேவைப்படும் என்பதனால், நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்த அக்கட்சிக்கு முடியாமல் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.