ஆசிரியர் இடமாற்றத்துக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன!

337 0

நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு மூன்றாம் கட்டமாக இடமாற்றம் வழங்கப்பட உள்ளன.

இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.

58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வு பெறும் வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

Leave a comment