காவிரி மேலாண்மை வாரியம் 6 வார கால கெடு நிறைவு – தமிழக விவசாயிகள் ஏமாற்றம்

19114 0

உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால கெடு இன்று மாலையுடன் முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான 6 வார கால கெடு இன்று மாலையுடன் முடிவடைந்ததால், தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a comment