வேலூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

417 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் இன்று விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் என்ற இடத்திலுள்ள தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது தொட்டியில் இருந்து திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது.

இதில் செல்வம், கோதண்டன் மற்றும் ரங்கநாதன் ஆகிய மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a comment