மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி

317 0

மன்னார் – தோட்டவௌி, ஜோசப்வாஸ் நகர் மற்றும் கட்டுவான் பிரதேச மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மன்னார் நீதவான் எம். எலெக்ஸ் ராஜாவினால் நீக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்டு மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளால் மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட தகவல்களின் படி, அப்பிரதேச மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்கு செல்ல 23 மீனவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

சட்டரீதியான மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை கொள்வனவு செய்து சட்டத்தை மீறாமல் கடற்றொழிலில் ஈடுபடுவதாக குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் உறுதியளித்த பின்னர் அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

Leave a comment