விநாயகர் சிலையை கரைக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலி

512 0

Tamil_News_large_1601729இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்க படகில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா நதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

நிலை தடுமாறியதால் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது 8 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான மூன்று பேரின் சடல்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில் ஏனைய ஒன்பது பேரின் சடலங்களை தேடும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.