அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் – மு.க.ஸ்டாலின் பேச்சு

424 0

தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் என ஈரோட்டில் நடந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார். 

ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்போது மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.
மு.க. ஸ்டாலின் பேசுகையில், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்றார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே திமுகவின் கொள்கையாகும். உடல் நலிவுற்று இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியால் விழா மேடைக்கு வர இயலவில்லை. கருணாநிதியின் கம்பீரக் குரலை மாநாட்டில் கேட்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. விழாவில் பங்கேற்க இயலாவிட்டாலும் கோபாலபுரத்தில் இருந்து நம்மை வாழ்த்தி வருகிறார். தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம், வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம். கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்போம்.
தமிழ்நாடு செழித்திட வேண்டும் என்ற நோக்கில் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநாடு வெற்றி பெற்றது போன்று ஈராடு மண்டலத்திலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.

Leave a comment