பிணை முறி அறிக்கை தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறு

240 0

பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதி ஆணைக்குழுவின் அறிக்கைககள் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதி ஆணைக்குழு அறிக்கையின் (PRECIFAC) தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு பணிகளை பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாத காலம் எடுக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அறிவித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்துக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment