தெமடகொட தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் தீ – 9 வீடுகள் சேதம்

206 0

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெமடகொட பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.

தீயிற்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமடகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment