மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுங்கள் – மக்கள் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி

415 0

மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும்.

பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஊழல் மோசடியற்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளினால் பின்னடைவிற்கு உட்படாது, குறைபாடுகளை நிவர்த்திசெய்து சரியான, வலுவான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நோக்கி கொண்டுசெல்ல இந்த பிரதிநிதிகள் கட்சிக்கு வலுசேர்ப்பார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் நேற்று (18)  கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment