வவுனியா பாலம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

22455 0

CAM01863-250x242வவுனியா தீருநாவல்குளத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த புதன் கிழமை மேசன் வேலைக்காக சென்ற போதே காணாமல் போயுள்ளதாக மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலமொன்றின் கீழ் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த நபர் பாக்கியநாதன் ஜஸ்டின் என்றும் நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, இது ஒரு கொலையா? மதுபோதையில் தவறி வீழ்ந்தாரா? என வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment