தேயிலை தொழிற்சாலைகளை கண்காணிக்க நடவடிக்கை

216 0

தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடு பூராகவுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

தற்சமயம் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்குவதாகவும் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a comment