சிரியாவில் துருக்கி படையினர் நடத்திய விமான தாக்குதலில் 9 பேர் பலி

1439 0

சிரியா நாட்டின் ஆப்ரின் பகுதியில் துருக்கி படையினர் நடத்திய விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் ஆப்ரின் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையை குறிவைத்து துருக்கியின் விமான படையினர் நடத்திய தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் அமைப்பினரும், குர்திஷ் போராளிகளும் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து, குர்திஷ் போராளிகள் கூறுகையில், சிரியாவின் ஆப்ரின் பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமையில் துருக்கியின் விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவே இப்பகுதியில் இருந்த பெரிய மருத்துவமனை, என தெரிவித்துள்ளனர்.

நேற்று சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment