வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் கைது!

2797 0

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலால் வரி செலுத்தாது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 9 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 49 வயதான இந்திய பிரஜை ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் இன்று (17) மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

Leave a comment