5 நாட்கள் தனிமையில் இருந்த குழந்தைகள்!

674 0

பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், கலேவல- பெலியகந்த பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றின், குடிசை ஒன்றிலிருந்து இரண்டு குழந்தைகளை பொலிஸார் இன்று  (15) மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒன்றரை வயது குழந்தையும், 4 வயது குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவல பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜனக்க விதானாராச்சிக்கு கிராமத்து மக்கள் வழங்கிய  தகவலுக்கமைய குறித்த குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குழந்தைகளின் தாய் இவர்களை கைவிட்டு வேறு பிரதேசத்துக்கு சென்று வாழ்ந்து வருவதாகவும், தந்தை ஆங்காங்கே நாட்களை கழித்து வருவதனால் பிள்ளைகளை பராமறிக்க ஒருவரும் இல்ழல எனவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 5 தினங்களாக பெற்றோரின் அரவணைப்பின்றி குழந்தைகள் இருவரும் தனித்து வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment