தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

251 0

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்டுகிறது.

தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

Leave a comment