சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம்

219 0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை இம் மாதம் 24ம் 25ம் திகதிகளில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சைக்கு சுமார் 1 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment