நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படகிலிருந்து இன்னுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலைகுளத்தில் பூ பரிக்கச்சென்றிருந்தவர்களின் படகொன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

