வாகன விபத்தில் ஒருவர் பலி

241 0

குருநாகல் – தம்புள்ள வீதியின் கிரிவவுல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிந்தகொள்ள பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment