அரச பாடசாலைகள் நாளை முதல் இயங்கும்- அரசாங்கம்

292 0

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக பல நாட்களாக கால வரையறையின்றி மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் அனைத்தும்  நாளை 12 ஆம் திகதி  திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் அராஜக சூழ்நிலை நிலவியதனால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பாடசாலைகள் மூப்பட்டிருந்தன.

தற்போது கண்டி மாவட்டத்தில் அமைதி நிலை நாட்டப்பட்டு, சுமுகநிலை ஏற்பட்டு வருவதனால் நாளை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

நேற்று முதல் கண்டி நிருவாக மாவட்டத்துக்கு அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment