கொழும்பில் துப்பாக்கியை வைத்து சாரதியை மிரட்டும் பெண்

317 0

கொஸ்வத்த பத்தரமுல்லையில், தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கியமை தொடர்பில் தென் மாகாண சபை உறுப்பினரின் எம்.கே .கசுன் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கேப் ரக வாகனத்தில் பயணித்த தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசும் மற்றும் பெண் ஆகியோர் குறித்த பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் துப்பாக்கியை கையில் வைத்து குறித்த பெண் மிரட்டியுள்ளமை காணொளிமூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment