கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைது

213 0

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கொடை, புத்கமுவ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்துப்பட உள்ளார்.

Leave a comment