சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171 ஆவது இசை ஆராதணை நிகழ்வு, யாழ்ப்பாணம் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்பட்டது.
இந்தியா துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன், வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும், யாழ்ப்பாணம் வலய கல்விப் பணிப்பாளருமாகிய ந.தெய்வேவந்திராஜா தலைமையில், சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171 ஆவது இசை ஆரதனை நேற்று நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத்தாதுவர் ஏ.நடராஜனும், வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் மதுமதி வந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும், தொழிலதிபர் நடேசு பாஸ்கரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மூத்த கலைஞர்களின் இசைக் கச்சேரிகளும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும், யாழ்ப்பாண இந்திய துணைதூதுவர் ஏ.நடராஜன் தம்பதியினர் கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது.