வவுணதீவு பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு.!

220 0

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கரவெட்டியைச் சேர்ந்த மன்மதன் அருள்ராஜ் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை (25ம் திகதி இரவு) உள்ளூர் தயாரிப்பான கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இவரது சடலம் அருகிலிருந்த துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ் மரணம் தொடர்பில் வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு சோக்கோ பொலிஸாரும் இணைந்து உறவினர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றதுடன், தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இவரது உடலினை உறவினர்கள் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உடல் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment