கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்கவினால் மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமூக ஆன்மிக வளர்ச்சிக்கு ஏதுவாக அன்று பகல் 1மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

