இந்தியாவின் உதவியுடன் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கு பொருளுதவி

236 0
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய அரசாங்கத்தால் 300 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவை வழங்கப்பட உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.

சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் மண்வெட்டிகள் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் இதில் உள்ளடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.

இவை நாளை ஹம்பாந்தோட்டையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a comment