மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

289 0

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேளைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றீடாக அத்தினங்களில் தலை மன்னார் மற்றும் மதவாச்சிக்கிடையில் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படடவுள்ளது.

Leave a comment