2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

282 0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செயலிழக்கச்செய்யப்படாத கைக்குண்டொன்றை வைத்திருந்த நபர் ஒருவர் திஸ்ஸமஹாராம ஹபரவெவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவன்திஸ்ஸபுற பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்த வேளையில் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து அவரது வீட்டிலிருந்து மேலுமொரு கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் 41 வயதுடைய பெறலிஹெல பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment