ஜனாதிபதிக்கு பிரதமரை மாற்றும் அளவுக்கு வருத்தங்கள் ஏதும் இல்லை- ராஜித

250 0

பிரதமரை மாற்றும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வருத்தங்கள் எதுவும் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித செனவிரத்ன தெரிவித்தார்.

பிரதமர் மாற்றம் குறித்து ஊடகங்களில் பாரிய பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், அது தற்பொழுது கைகூடாது என்று தெரிந்ததன் பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை மாற்றமும் ஊடகங்களுக்கு அவசரமானதற்கு தமக்கு அதில் அவசரம் ஏதும் இல்லை. இருப்பினும், இவ்வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழலாம் எனவும், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பவற்றுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், கடந்த அமைச்சரவை சந்திப்பின் போதும் இரு கட்சிகளினதும் உறுப்பினர்கள் பிரதமருடன் சுமுகமாக கலந்துரையாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment