கத்தார் ஓபன் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறினார் பெட்ரா கிவிடோவா

202 0

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பெட்ரா கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் அந்நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் கிவிடோவா , முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகியை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என வோஸ்னியாகி கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை கிவிடோவா 7-6 (7-3) என போராடி கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை கிவிடோவா 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 7-6 (7-3), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற இருந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஹலெப் விலகியதையடுத்து, கேப்ரின் முகுருசா விளையாடாமலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெட்ரா கிவிடோவா, கேப்ரின் முகுருசாவை எதிர்கொள்ள இருக்கிறார்.

Leave a comment