இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ரவுகானி, டெல்லியில் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்த அவர், ஐதராபாத்தில் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
நேற்று கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குதுப்மினார் அருகேயுள்ள ஷாஹி கோபுரம், மற்றும் உலகப்புகழ் பெற்ற சலர்ஜங் அருங்காட்சியகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களை பார்வையிட்டார். சார்மினார் அருகேயுள்ள பிரபல மெக்கா மசூதியில் நடைபெற்ற ‘ஜும்மா’ தொழுகையிலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு வந்த ரவுகானி, இன்று ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார் ரவுகானி. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட ரவுகானியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர். #Ira